இன்றும் நடராஜன் அபார பந்துவீச்சு! தொடரை கைப்பற்றி பதிலடி கொடுத்த‌து இந்தியா!!

 

இன்றும் நடராஜன் அபார பந்துவீச்சு! தொடரை கைப்பற்றி பதிலடி கொடுத்த‌து இந்தியா!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது 20 ஓவர் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக மேத்யூ மற்றும் டி ஆர்சிசார்ட் களமிறங்கினர். தொடக்கத்திலிருந்தே அதிரடியாக ஆடிய ஆஸ்திரேலிய அணி இறுதியில் 5 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் மேத்யூ 58 ரன்கள் குவித்தார்.

Yuzvendra Chahal

195 என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ராகுல் மற்றும் தவான் களமிறங்கினர். தவான் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் கோலி 40 ரன்களிலும், இறுதியில் அதிரடியாக ஆடிய பாண்ட்யா 42 ரன்கள் குவித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார். முடிவில் 4 விக்கெட்களை இழந்து 195 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிப்பெற்றது. இந்த வெற்றியின் மூலம் டி-20 தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது. இந்த போட்டியிலும் நடராஜன் 2 முக்கிய விக்கெட்களை கைப்பற்றி ரசிகர்களை ஆரவாரப்படுத்தினார். 2 போட்டிகளிலும் தமிழக வீர‌ர் நடராஜன் அபாரமாக பந்துவீசி ரசிகர் பட்டாளத்தை சம்பாதித்துக்கொண்டார்.