ஒரே நாளில் 1576 பேர் பலி : தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு!

 

ஒரே நாளில் 1576 பேர் பலி : தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் 13 ஆவது நாளாக ஒரு லட்சத்திற்கும் கீழ் கொரோனா வைரஸ் பாதிப்பு பதிவாகியுள்ளது.

ஒரே நாளில் 1576 பேர் பலி : தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் 13 ஆவது நாளாக ஒரு லட்சத்திற்கும் கீழ் கொரோனா வைரஸ் பாதிப்பு பதிவாகியுள்ளது.இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 58,419 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 62 ஆயிரம் , நேற்று 60 ஆயிரமாக இருந்த பாதிப்பு இன்று 58 ஆயிரமாக குறைந்துள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தவர்களின் மொத்த பாதிப்பு 2,98,81,965 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கடந்த 24 மணிநேரத்தில் 1576 உயிரிழந்த நிலையில் மொத்த கொரோனா இறப்பு எண்ணிக்கை 3,86,713ஆக அதிகரித்துள்ளது.

ஒரே நாளில் 1576 பேர் பலி : தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு!

ஒரேநாளில் 87,619 குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் இதுவரை 2,87,66,009 பேர் கொரோனாவிலிருந்து குணமாகியுள்ளனர். கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 96.27% ஆகவும், உயிரிழப்பு விகிதம் 1.29% ஆகவும் உள்ளது. தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 7,29,243 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 27,66,93,572 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர்.