ஒரே நாளில் குறைந்த கொரோனா மரணம்…ஆறுதல் அளிக்கும் ரிப்போர்ட்!!

 

ஒரே நாளில் குறைந்த கொரோனா மரணம்…ஆறுதல் அளிக்கும் ரிப்போர்ட்!!

இந்தியாவில் கடந்த சில வாரமாக கொரோனா தொற்று பாதிப்பு 40 ஆயிரத்தை எட்டியது. இதன் பிறகு தொற்று எண்ணிக்கையில் சிறிது மாற்றம் ஏற்பட்ட நிலையில் தற்போது 35 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்து 30 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் தினசரி தொற்று பாதிப்பு என்பது பதிவாகி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,256 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. நேற்று கொரோனா பாதிப்பு 30,773 ஆக குறைந்திருந்த நிலையில் மீண்டும் தொற்று பாதிப்பு குறைந்து 30,256 ஆக பதிவாகியுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 33,478,419 ஆக அதிகரித்துள்ளது.

ஒரே நாளில் குறைந்த கொரோனா மரணம்…ஆறுதல் அளிக்கும் ரிப்போர்ட்!!

அதேபோல் கடந்த 24 மணிநேரத்தில் 295 பேர் பலியாகியுள்ளனர். நேற்று 309 பேர் ஒரேநாளில் இறந்த நிலையில் இன்று இறப்பு எண்ணிக்கை சற்று குறைந்து காணப்படுகிறது. கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,45,133 ஆக அதிகரித்துள்ளது.

ஒரே நாளில் குறைந்த கொரோனா மரணம்…ஆறுதல் அளிக்கும் ரிப்போர்ட்!!

கடந்த 24 மணிநேரத்தில் 43,938 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவிலிருந்து இதுவரை 3,27,15,105 பேர் குணமாகியுள்ளனர். அத்துடன் 3,18,181 பேர் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் . இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 37,78,296 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில் மொத்தமாக இதுவரை 80,85,68,144 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.