புதிய நோயாளிகள் அதிகரிப்பில் இந்தியாவே முதல் இடத்தில்! -உலகளவில் கொரோனா

 

புதிய நோயாளிகள் அதிகரிப்பில் இந்தியாவே முதல் இடத்தில்! -உலகளவில் கொரோனா

புதிய கொரோனா நோயாளிகள் அதிகரிப்பதில் தொடர்ந்து இந்தியாவே முதல் இடத்தில் இருந்து வருகிறது. இது ரொம்பவே ஆபத்தான நிலையாகக் கருதப்படுகிறது.

புதிய நோயாளிகள் அதிகரிப்பில் இந்தியாவே முதல் இடத்தில்! -உலகளவில் கொரோனா

அக்டோபர் 01-ம் தேதி காலை நேர நிலவரப்படி நிலவரப்படி, உலகளவில் கொரோனாவின் பாதிப்பு எவ்வளவு, குணம் அடைந்தவர்கள், மரணம் அடைந்தவர்கள் உள்ளிட்ட விவரங்களைப் பார்ப்போம்.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 3 கோடியே 41 லட்சத்து 59 ஆயிரத்து 232 பேர்.

புதிய நோயாளிகள் அதிகரிப்பில் இந்தியாவே முதல் இடத்தில்! -உலகளவில் கொரோனா

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 2 கோடியே 54 லட்சத்து 30 ஆயிரத்து 552 நபர்கள்.

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 10 லட்சத்து 18 ஆயிரத்து 792 பேர்.

தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 76,43,983 பேர். இவர்களில் 99 சதவிதத்தினர் லேசான அறிகுறிகளோடு சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதம் இருக்கு 1 சதவிகிதத்தினருக்கு தீவிர சிகிச்சை அளிக்கும் நிலை இருக்கிறது.

கொரோனா பாதிப்பு நாடுகளின் பட்டியலில் பார்க்கும்போது அமெரிக்காவில் 74,47,282 பேரும், இந்தியாவில் 63,12,584 பேரும், பிரேசில் நாட்டில் 48,13,584 பேரும் கொரோனவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

புதிய நோயாளிகள் அதிகரிப்பில் இந்தியாவே முதல் இடத்தில்! -உலகளவில் கொரோனா

இது இன்றைய நிலை. நேற்று உறுதிசெய்யப்பட்டுள்ள புதிய நோயாளிகள் பட்டியலில், அமெரிக்காவில் 40,929 பேரும், பிரேசிலில் 33,269 பேரும் புதிய நோயாளிகளாக அதிகரித்திருக்கிறார்கள். ஆனால், இந்தியாவில் 86,748 பேராக அதிகரித்துள்ளனர். நேற்று இறந்தோர் எண்ணிக்கையும் அமெரிக்கா, பிரேசில் நாடுகளை விடவும் இந்தியாவில் அதிகம்.

இந்தியாவில் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை மற்ற நாடுகளை விடவும் அதிகளவில் உள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இதே நிலை நீடிக்கிறது. இதனால், அமெரிக்காவை விடவும் அதிக கொரோனா பாதிப்புக்குள்ளான நாடாக இந்தியா மாறிவிடும் அபாயமும் இருக்கிறது.