இந்தியா வருகிறது மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள்!

 

இந்தியா வருகிறது மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள்!

3 ரஃபேல் போர் விமானங்கள் இன்று மாலை பிரான்ஸில் இருந்து இந்தியாவிற்கு வர உள்ளன.

இந்தியா வருகிறது மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள்!

இந்திய- சீன எல்லையான லடாக்கில் சீன ராணுவம் அடிக்கடி அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் விமானப்படைக்கு வலுசேர்க்கும் விதமாக கடந்த ஜூலை மாதம் 29ம் தேதி 5 ரஃபேல் போர் விமானங்கள் பிரான்ஸில் இருந்து வரவழைக்கப்பட்டு, விமானப்படையில் சேர்க்கப்பட்டன. பிரான்ஸ் அரசுடன் மத்திய அரசு 59 ஆயிரம் கோடி ரூபாயில் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க அண்மையில் ஒப்பந்தம் செய்திருந்தது.

இந்தியா வருகிறது மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள்!

அதிநவீன தொழில் நுட்பத்துடன் உருவாக்கப்பட்டிருக்கும் ரஃபேல் விமானங்கள், வானில் இருந்தே இலக்கை குறிவைத்து தாக்குல் திறன் கொண்டது. இந்த நிலையில், இன்று மாலை மேலும் 3 ரஃபேல் விமானங்கள் பிரான்ஸில் இருந்து இந்தியா வரவிருக்கின்றன. இதன் மூலமாக இந்தியாவில் இருக்கும் ரஃபேல் விமானங்களின் எண்ணிக்கை 8 ஆக உயரும்.