கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா.. இந்தியாவில் ஓரே நாளில் 24,850 பேர் பாதிப்பு!

 

கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா.. இந்தியாவில் ஓரே நாளில்  24,850 பேர் பாதிப்பு!

இதுவரை உலகம் முழுவதும் 11,267,309 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 530,754 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர. மேலும் 6,059,565 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் அன்லாக் 2.0 ஆரம்பித்து விட்டது. இருப்பினும் அந்தந்த மாநிலங்களில் கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு மாநில முதல்வர்களே ஊரடங்கை நீடித்து வருகின்றனர்.

கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா.. இந்தியாவில் ஓரே நாளில்  24,850 பேர் பாதிப்பு!

இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 6,48,315 லிருந்து 673,165 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 409,083 பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19,268 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது . இந்தியாவில் 24 மணிநேரத்தில் 24,850 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.