இந்தியாவில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா; ஒரே நாளில் 1,179 பேர் மரணம்!

 

இந்தியாவில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா; ஒரே நாளில் 1,179 பேர் மரணம்!

இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் அதே சூழலில், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அன்லாக் செயல்பட தொடங்கிவிட்டது. குறிப்பாக ஒரு சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு பன்மடங்கு அதிகரித்திருப்பதால் மாநில அரசுகள் அதிரடி நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இந்தியா விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும் என மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்து வருகிறது. இந்த நிலையில், இந்தியாவின் மொத்த கொரோனா பாதிப்பு விவரங்கள் வெளியாகியிருக்கிறது.

இந்தியாவில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா; ஒரே நாளில் 1,179 பேர் மரணம்!

கடந்த 24 மணி நேரத்தில் 80,472 பேர் உயிரிழந்ததால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 62,25,764 ஆக அதிகரித்திருப்பதாகவும், ஒரே நாளில் 1,179 பேர் உயிரிழந்ததால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 97,497 ஆக அதிகரித்துள்ளதாகவும் இதுவரை கொரோனாவில் இருந்து 51.87 லட்சம் பேர் குணமடைந்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கொரோனா பாதித்த 9.40 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவாதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.