தந்தை இறந்த சோகத்தில், இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

 

தந்தை இறந்த சோகத்தில், இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி

திருச்சியில் தந்தை உயிரிழந்த துக்கத்தில் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி உறையூர் வடிவேல் நகர் பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (26). பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி தனலட்சமி என்ற மனைவி உள்ளார். தமிழ்செல்வனின் தந்தை மணி உடல்நலக் குறைவு காரணமாக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த 23ஆம் தேதி அன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தந்தை இறந்த சோகத்தில், இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

இதனால் தமிழ்ச்செல்வன் மன வேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று காலை தனலெட்சுமி வெளியே சென்றிருந்தபோது வீட்டில் தனியாக இருந்த அவர், தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாலை வீட்டிற்கு திரும்பியபோது, கணவர் தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்த தனலட்சுமி, இதுகுறித்து உறையூர் போலீசாருக்கு தகவல் அளித்தார்.

தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.