தமிழகத்தில் கரும்பூஞ்சை நோயால் சுமார் 4000பேர் பாதிப்பு, 122 பேர் பலி

 

தமிழகத்தில் கரும்பூஞ்சை நோயால் சுமார் 4000பேர் பாதிப்பு, 122 பேர் பலி

சென்னை கோட்டூர்புரத்தில் கொரொனா தடுப்பூசி முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்கள் மா சுப்ரமணியன், கே.என் நேரு ஆகியோர் துவக்கி வைத்தனர். மேலும் நிவாரண பொருட்களையும் அமைச்சர்கள் வழங்கினர்.

தமிழகத்தில் கரும்பூஞ்சை நோயால் சுமார் 4000பேர் பாதிப்பு, 122 பேர் பலி

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், “கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்திற்கு தடையின்றி தடுப்பூசி வந்துகொண்டிருக்கிறது. அதனடிப்படையில் தமிழகத்திற்கு தற்போது வரையிலும் ஒரு கோடியே 1.62 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. கையிருப்பில் 7 லட்சத்து 80 ஆயிரம் வரை தடுப்பூசிகள் உள்ளது.

ஜிகா வைரஸினால் ஏற்படும் பாதிப்புகள் தமிழகமெங்கும் பெரும் பீதியை உருவாக்கியுள்ளது. கேரளாவில் இதுவரை 18 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்கின்ற தகவல் கிடைத்துள்ளது. கேரளாவும் தமிழ்நாடும் சந்திக்கக்கூடிய எல்லையோரங்களில் இருக்கக்கூடிய 2,660 வீடுகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவில் தற்போது வரை யாருக்கும் எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

கருப்பு பூஞ்சை நோயால் தமிழகம் முழுவதும் 3,929 பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 122 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்க 7000 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக சென்னை, கோவை ஆகிய மாவட்ட மருத்துவமனைகளில் தலா 500 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது” என தெரிவித்தார்.