ஒரே பெண்ணை காதலித்தோம் -ஒரே நேரத்தில் விட்டு கொடுத்தோம் -சகோதர்களுக்கு நேர்ந்த சோகம்.

 

ஒரே பெண்ணை காதலித்தோம் -ஒரே நேரத்தில் விட்டு கொடுத்தோம் -சகோதர்களுக்கு நேர்ந்த சோகம்.


ஒரே பெண்ணை காதலித்த இரு சகோதரர்கள் ,ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது

ஒரே பெண்ணை காதலித்தோம் -ஒரே நேரத்தில் விட்டு கொடுத்தோம் -சகோதர்களுக்கு நேர்ந்த சோகம்.


ராஜஸ்தானின் பூண்டி மாவட்டத்தில் டப்லானா காவல் நிலைய எல்லைக்குள் உள்ள கேசவ்புரா கிராமத்தில் வசிக்கும் இரு சகோதர்களான தேவ்ராஜ் குர்ஜார் (23) மற்றும் மகேந்திர குர்ஜார் (23) ஆகிய இருவரும் ஆஷா என்ற அதே ஊரை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தார்கள் .அதனால் இருவரும் அந்த பெண்னின் பெயரை தங்களின் கைகளில் பச்சை குத்தி கொண்டார்கள் .
ஒருவர் காதலிக்கும் விஷயம் இன்னொருவர்க்கு தெரியாமல் இருந்தது .ஆனால் கடந்த ஞாயிற்று கிழமையன்று இருவரும் ஒரே பெண்ணை காதலிக்கும் விஷயம் அவர்களுக்குள் தெரியவந்துள்ளது .அதனால் அவர்கள் ஒரு அதிர்ச்சிகரமான முடிவை எடுக்க முடிவெடுத்தார்கள் .அதனால் இருவரும் சேர்ந்து அந்த காதலியை வேறொருவருக்கு விட்டுக்கொடுக்க முடிவெடுத்துள்ளார்கள் .அதனால் தாங்கள் உயிரோடு இருந்தால் அந்த காதலி வேறுறொருவருடன் வாழ்வதை தாங்க முடியாது என்று இருவரும் ஒன்றாக இறக்க முடிவெடுத்தார்கள் .அதனால் இருவரும் ஒரு தற்கொலைக்குறிப்பை வீடியோவாக வெளியிட்டார்கள் .அந்த வீடியோவில் தங்களிருவரும் ஒரே பெண்ணை காதலித்ததால் இறக்க விரும்புவதாகவும் ,அந்த பெண்ணுக்கு வேறோர் நல்ல மணமகனை பார்த்து திருமணம் செய்து வைக்கவேண்டுமென்றும் ,தங்களின் இறப்புக்கு யாரும் காரணமில்லையென்றும் வெளியிட்டார்கள் .
பின்னர் குட்லா நிலையம் அருகே உள்ள டெல்லி-மும்பை ரயில் பாதையில் இருவரும் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்கள் .பிறகு போலீசார் இருவரின் சடலத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்கள் .

ஒரே பெண்ணை காதலித்தோம் -ஒரே நேரத்தில் விட்டு கொடுத்தோம் -சகோதர்களுக்கு நேர்ந்த சோகம்.