“இந்த மூலிகையில் இவ்ளோ இம்மியூனிட்டி பவரா ?”என்று வெளிநாட்டுக்காரனே வியக்கும் பொருள்

 

“இந்த மூலிகையில் இவ்ளோ இம்மியூனிட்டி பவரா ?”என்று வெளிநாட்டுக்காரனே வியக்கும் பொருள்

கொரோனா, கருப்புப் பூஞ்சை என எந்த வகை நோயாக இருந்தாலும் உங்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் உங்களால் அந்த நோயை எளிதில் எதிர்கொள்ளலாம் என்பதே மருத்துவர்களின் கருத்து. அதற்காக நாம் பெரிதாக சிரமப்பட தேவையில்லை. முறையான உணவுகளை எடுத்துக்கொண்டாலே போதும்.நமது உடலுக்கு பாக்டீரியா, வைரஸ், பூஞ்சைகள், ஒட்டுண்ணிகள் உள்ளிட்டவைகளினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து நம்மை பாதுகாக்க நோய் எதிர்ப்பு சக்தி உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி மண்டலம், பல்வேறு வகையான செல்கள், புரோட்டீன்கள், திசுக்கள் மற்றும் உறுப்புகளினால் ஆனது. உடலினுள் நுழையும் வெளிநாட்டு பொருட்களை, ஆன்ட்டிபாடிகளின் துணையுடன் எதிர்கொண்டு நம்மை நோய்களில் இருந்து பாதுகாக்கிறது. மருத்துவர்களும், நிபுணர்களும் அதற்காகவே எப்போதுமே, நாம் நம்மை ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி வருகின்றனர்.

கற்பூரவல்லியுடன் இதனுடன் மஞ்சள் மற்றும் இஞ்சி அல்லது மிளகு போன்ற ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மூலிகையை சேர்ப்பதால் நமது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க இது உதவும்.

“இந்த மூலிகையில் இவ்ளோ இம்மியூனிட்டி பவரா ?”என்று வெளிநாட்டுக்காரனே வியக்கும் பொருள்

இந்த கலவையுடன் எலுமிச்சை சேர்த்து ஒரு சூடான பானத்தை உண்டாக்கி அருந்தலாம். ஆனால் இந்த மூலிகைகளை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

சீந்தில்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் சீந்தில் தாவரத்திற்கு முக்கிய பங்குண்டு. இது முக்கியமாக காய்ச்சல் மற்றும் எரியும் உணர்வு, அதிக தாகம், பசியின்மை, குமட்டல் மற்றும் தொற்றுநோய்களுடன் தொடர்புடைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண உதவுகிறது. மேலும் இது நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது.

அன்னாசி பூ

அன்னாசி பூ வைரஸ் தடுப்பு விளைவுகளை ஏற்படுத்துவதால் இது முக்கியமான மூலிகையாகும். ஒருவர் ஒன்று அல்லது இரண்டு அன்னாசி பூவை தண்ணீரில் கொதிக்க வைத்து கஷாயம் செய்து குடிக்கலாம்.

அஸ்வகந்தா

அழுத்தத்தை எதிர்த்து போராட உதவக்கூடிய ஒரு மூலிகையாக அஸ்வகந்தா உள்ளது. இது சகிப்பு தன்மையையும் வலிமையையும் அதிகரிக்கிறது. இது நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு வலு சேர்க்கிறது. மேலும் நல்லப்படியான தூக்கம் வருவதற்கு இது உதவுகிறது.

கற்பூரவல்லி பச்சடி

ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் அல்லது நெய்யை விட்டு சூடாக்கவும். அதில் மிளகு, பச்சை மிளகாய் சேர்த்து பின்னர் தேங்காய் சேர்த்து வதக்கவும். கற்பூரவல்லி இலையையும் அதில் சேர்த்து நன்கு வதக்கவும்.

பிறகு அதில் தேவையான அளவு உப்பை சேர்த்து சட்னி போல் அரைக்கவும். பிறகு அதில் தயிர் மற்றும் தண்ணீர் சேர்க்கவும். ஒரு கடாயில் நெய் அல்லது தேங்காய் எண்ணெயைச் சூடாக்கி அதில் அரை டீஸ்பூன் சீரகம், கறிவேப்பிலை மற்றும் சிவப்பு மிளகாயை சேர்த்து வதக்கி அதை பச்சடியில் சேர்க்கவும் .

மருத்துவர்களின் அறிவுறுத்தும் மருந்துகளுடன் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் உணவுகளை எடுத்துக்கொண்டால் அது அவர்களை தீவிர பாதிப்பில் இருந்து காக்கும். மேலே சொன்ன உணவுகள் எளிதில் அனைவருக்கும் கிடைக்கக் கூடியவையே. மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்வது அனைத்து வகையிலும் நன்மை பயக்கும்.