கள்ளக்காதலால் முதியவருடன் வாழ சென்ற மனைவி: பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற கணவன்!

 

கள்ளக்காதலால் முதியவருடன் வாழ சென்ற மனைவி: பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற கணவன்!

சென்னை எம்.ஜி.ஆர் நகர் 3-ஆவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் செந்தில் முருகன் (38). இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், 13 வயது மகளும் உள்ளனர். செந்தில் முருகன் பெயிண்டராக பணிபுரிந்து வருகிறார்.

கள்ளக்காதலால் முதியவருடன் வாழ சென்ற மனைவி: பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற கணவன்!

இந்நிலையில் லட்சுமிக்கும் அதே பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி (62) என்ற முதியவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாற செந்தில் முருகன் லட்சுமியை கண்டித்துள்ளார். ஆனால் லட்சுமி கணவரின் பேச்சை கேட்காமல் இருந்து வந்துள்ளார். ஒருக்கட்டத்தில் கணவன் -மனைவிக்கு இடையே பிரச்னை வெடிக்க லட்சுமி கோவிந்தசாமி வீட்டிற்கு சென்று தங்கியுள்ளார். இதனால் செந்தில் முருகன் பலமுறை மனைவியை வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனாலும் லட்சுமி வருவதாக இல்லை.

கள்ளக்காதலால் முதியவருடன் வாழ சென்ற மனைவி: பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற கணவன்!
இதனால் ஆத்திரமடைந்த செந்தில் முருகன் கோவிந்தசாமியின் வீட்டிற்கு பெட்ரோலுடன் சென்றுள்ளார். பின்னர் அவரின் வீட்டு கதவை தட்ட லட்சுமியும், கோவிந்த சாமியும் கதவை திறந்துள்ளனர். அப்போது செந்தில் முருகன் தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து கோவிந்தசாமி மற்றும் லட்சுமி மீது ஊற்றி தீ வைத்துள்ளார். இதனால் தீ மளமளவென பரவி லட்சுமி சம்பா இடத்திலேயே இறந்துவிட கோவிந்தசாமிக்கு 60 சதவிகிதம் தீ காயங்களுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

கள்ளக்காதலால் முதியவருடன் வாழ சென்ற மனைவி: பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற கணவன்!

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த எம்.ஜி.ஆர் நகர் போலீசார் செந்தில் முருகனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.