வீட்டில் பதுக்கி வைத்து சட்ட விரோத லாட்டரி சீட்டு விற்பனை-ஒருவர் கைது
சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்தவரை கைது செய்த, உளூந்தூர்பேட்டை போலீசார், அவரிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம்,
உளுந்தூர்பேட்டை பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இது தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க, உளுந்தூர்பேட்டை காவல்துறையினருக்கு அவர் உத்தரவிட்டார்.
அதையடுத்து , காவல் உதவி ஆய்வாளர் அகில் தலைமையில் சென்ற தனிப்படை போலீசார், காட்டுநெமிலி கிராமத்தைச் சேர்ந்த முத்தரசன் ( 55 ) என்பவரை கைது செய்தனர். அவர் வீட்டில் பதுக்கி வைத்து சட்டவிரோதமாக விற்பனை செய்த லாட்டரி சீட்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அவரிடமிருந்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
உளுந்தூர்பேட்டை: வீட்டில் பதுக்கி வைத்து சட்ட விரோத லாட்டரி சீட்டு விற்பனை-ஒருவர் கைது!#ulundurpettai #TTN pic.twitter.com/sGM2luWreZ
— Top Tamil News (@toptamilnews) September 6, 2020