கள்ளக்காதல் ஜோடி கிணற்றில் விழுந்து தற்கொலை

 

கள்ளக்காதல் ஜோடி கிணற்றில் விழுந்து தற்கொலை

ஈரோடு

அந்தியூர் அருகே உறவினர்கள் கண்டித்ததால் கள்ளக்காதல் ஜோடி கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த சென்னம்பட்டி ஜர்த்தல் பகுதியை சேர்ந்தவர் விஜயராகவன். இவர் ஈரோட்டில் உள்ள தனியார் நூற்பாலையில் வேலைசெய்து வந்தார். விஜயராகவனுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், விஜயராகவனுக்கும், அவரது தங்கை உறவு முறையிலான கலையரசி என்பவருக்கும் தகாத உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

கள்ளக்காதல் ஜோடி கிணற்றில் விழுந்து தற்கொலை

இதனை அறிந்த குடும்பத்தினர், இருவரையும் கண்டித்து உள்ளனர். இதனால் மனமுடைந்த விஜயராகவன் மற்றும் கலையரசி ஆகியோர் தற்கொலை செய்துகொள்வது என முடிவு எடுத்துள்ளனர். இதனை அடுத்து நேற்று இரவு 10 மணி அளவில் அந்தியூர் அடுத்த ஜெ.ஜெ.நகர் பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து இருவரும் தற்கொலை செய்துகொண்டனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் இருவரது உடல்களையும் மீட்டனர். அதனை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், தற்கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.