மகன் வயது இளைஞருடன் தொடர்பு… குடும்பத்தினர் கண்டித்ததால் கள்ளக்காதல் ஜோடி விபரீத முடிவு!
ஈரோடு
கோபிச்செட்டிப்பாளையம் அருகே திருப்பூரை சேர்ந்த கள்ளக்காதல் ஜோடி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் ஆத்துபாளையம் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி தங்கமணி. இவர்களுக்கு பிரபாகரன் (22), செல்வி(17) என்ற 2 பிள்ளைகள் உள்ளனர். தங்கமணி, வேலம்பாளையத்தை சேர்ந்த பழனிச்சாமி என்பவரது மகன் அஸ்வின் நடத்திவந்த கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது, அஸ்வினும், தங்கமணிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
இதனை அறிந்த, இருவரது குடும்பத்தினரும், அவர்களை கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த கள்ளக்காதல் ஜோடிகள், தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்து நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியேறி, கோபிசெட்டிப்பாளையம் அடுத்துள்ள மேவாணி பகுதிக்கு வந்தனர். பின்னர், இருவரும் விஷம் குடித்துவிட்டு அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.
நேற்று காலை கிணற்றில் உடல்கள் மிதப்பதை கண்ட அந்த பகுதி மக்கள் கோபிசெட்டிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கோபிச்செட்டிப்பாளைம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்