எஸ்.பி.பிக்காக மோட்ச தீபம் ஏற்றிய இளையராஜா !
Sep 26, 2020, 19:24 IST1601128471000
மறைந்த பாடகர் எஸ்.பி.பிக்காக, இசைஞானி இளையராஜா திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மோட்ச தீபம் ஏற்றி வழிபட்டார்.
பின்னணி பாடகர் எஸ்.பி.பி. உடல் இன்று, அரசு மரியாதையுடன், திருவள்ளூர் அருகே, தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
எஸ்.பி.பி மறைவுக்கு இசைஞானி இளையராஜா உருக்கமான வீடியோ வெளியிட்டிருந்தார். அவரது இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் திரை உலகத்தினர் மற்றும் ரசிகர்கள் கூட்டம் திரளும் என்பதால் அஞ்சலி செலுத்த இளையராஜா நேரில் வரவில்லை.
இந்த நிலையில் , திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வந்த அவர், தன் நண்பரின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என
மோட்ச தீபம் ஏற்றி வழிபட்டார்.