பெங்களூரு சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார் இளவரசி!

 

பெங்களூரு சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார் இளவரசி!

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு பரபரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்ட இளவரசி விடுதலையானார்.

கடந்த 2017ம் ஆண்டு சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா, சசிகாலவின் உறவினர் இளவரசி, சுதாகர் உள்ளிட்ட 3 பேரும் பெங்களூரு பரபரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். நன்னடத்தை காரணமாக சசிகலா கடந்த ஆண்டே விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 4 ஆண்டுகள் சிறைவாசம் முடிந்து கடந்த ஜன.27ம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.

பெங்களூரு சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார் இளவரசி!

இதற்கிடையில், அவருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தற்போது பெங்களூருவில் இருக்கும் தனியார் விடுதியில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். சசிகலா வரும் 8ம் தேதி தமிழகம் வரவிருப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்திருக்கிறார். சசிகலாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்ட போது, அவரது உறவினரான இளவரசிக்கும் கொரோனா இருப்பது கண்டறியபட்டது. அவரும் விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

பெங்களூரு சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார் இளவரசி!

இந்த நிலையில், பெங்களூரு பரபரப்பன அக்ரஹார சிறையில் இருந்து இளவரசி விடுதலை செய்யப்பட்டார். சசிகலாவுக்கு உறவு முறையில் அண்ணியான இளவரசி மின்சார விபத்தில் தனது கணவரை இழந்து விட்டதால் சசிகலாவுடன் போயஸ் கார்டானிலேயே செட்டில் ஆகிவிட்டார் என்பதும் சிறையில் இருந்து விடுதலையான இளவரசி தனது மகன் வீட்டிற்கு செல்லவிருக்கிறார் என்பதும் கூடுதல் தகவல்.