ரூ.8 லட்சம் கொடுத்தால் டிசி- தந்தையை இழந்த மாணவனை நெருக்கும் கல்லூரி!

 

ரூ.8 லட்சம் கொடுத்தால் டிசி- தந்தையை இழந்த மாணவனை நெருக்கும் கல்லூரி!

தந்தை இறந்ததால் படிப்பைத் தொடர முடியவில்லை என டிசி கேட்ட மாணவனிடம் , 8 லட்ச ரூபாய் கேட்டு தனியார் வேளாண்மைக் கல்லூரி நெருக்கடி அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ரூ.8 லட்சம் கொடுத்தால் டிசி- தந்தையை இழந்த மாணவனை நெருக்கும் கல்லூரி!

தூத்துக்குடி மாவட்டம், ஒட்டபிடாரம், அக்கநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நவநீதகோபாலகிருஸ்ணன் மகன் சூரியபிரகாஷ்(18). பட்டியல் வகுப்பைச் சேர்ந்த அவர், திருச்சி சிறுகனூரில் உள்ள நாளந்தா வேளாண்மை கல்லூரியில் 2018 – 2019 ம் ஆண்டில் பிஎஸ்சி அக்ரி ஹான்ஸ் படிப்பில் சேர்த்தார். விவசாய கூலித் தொழிலாளியான நவநீதிகிருஷ்ணன் தனது மகனுக்காக அப்போது, ரூ.1லட்சத்து 85 ஆயிரம் செலுத்தி இருந்தார்.

ரூ.8 லட்சம் கொடுத்தால் டிசி- தந்தையை இழந்த மாணவனை நெருக்கும் கல்லூரி!

மாணவர் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால், அரசு உதவித்தொகையிலேயே படிக்கலாம் என கல்லூரி நிர்வாகம் கூறி இருந்த நிலையில், தற்போது இரண்டாம் ஆண்டு கல்விக்கட்டணமாக ரூ.1 லட்சத்து 85 ஆயிரம் பணம் கட்ட வேண்டும் என கல்லூரி நிர்வாகம் வலியுறுத்தி உள்ளது.

ரூ.8 லட்சம் கொடுத்தால் டிசி- தந்தையை இழந்த மாணவனை நெருக்கும் கல்லூரி!

இந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக வருவாய் இல்லாத விரக்தியில் மாணவனின் தந்தை மாரடைப்பால் அண்மையில் உயிரிழந்தார். தந்தை உயிரிழந்ததால் படிப்பைத் தொடர முடியாத நிலையில் மாணவனும், அவனது தாய் ராமஜெயந்தியும், கல்லூரிக்கு வந்து குடும்ப சூழ்நிலையினை கூறி மாற்றுச் சான்றிதழ் கேட்டுள்ளனர்.

ரூ.8 லட்சம் கொடுத்தால் டிசி- தந்தையை இழந்த மாணவனை நெருக்கும் கல்லூரி!

குடும்ப வறுமை காரணமாக, தூத்துக்குடி பகுதியில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்வி பயில்வதாக கூறி சான்றிதழைக் கேட்டுள்ளனர். ஆனால், கல்லூரி நிர்வாகம் மூன்றாண்டுக்கும் சேர்த்து செலுத்த வேண்டிய 8 லட்சம் ரூபாய் கொடுத்தால்தான் மாற்றுச் சான்றிதழ் வழங்க முடியும் என கூறியுள்ளனர்.

இது குறித்து சிறுகனூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்றுகூறி, மாணவனின் தாய் கல்லூரி நுழைவு வாயிலிலேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

ரூ.8 லட்சம் கொடுத்தால் டிசி- தந்தையை இழந்த மாணவனை நெருக்கும் கல்லூரி!

தனது மகனுக்கு மாற்றுச்சான்றிதழ் கொடுக்க மறுத்தால், தானும் தனது மகனும் மண்ணெண்ணெய் ஊற்றித் தீயிட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என் ராமஜெயந்தி கூறினார். இது குறித்து கல்லூரி நிர்வாகம் கூறுகையில், அந்த மாணவன், மேனேஜ்மென்ட் கோட்டாவில் சேர்ந்ததால், கல்லூரிக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை ரூ. 8 லட்சம் செலுத்தினால் அவரது மாற்றுச்சான்றிதழை செலுத்த தயாராக உள்ளோம் என்று கூறுகின்றனர்.

இந்த கல்லூரியில் போதிய மின் வசதி இல்லை, குடிநீர் மற்றும் கழிவறை இல்லை, முறையான ஆசிரியர்கள், செய்முறைக்கு தேவையான விவசாய பண்ணை தோட்டங்கள் இல்லாததால், கடந்த ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே பாரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முதலாண்டு மாணவன் மனோஜ்குமார் உள்ளிட்ட 3 மாணவர்கள் 2 மாணவிகள் இக்கல்லூரியில் படிக்க விருப்பமின்றி தலா ரூ 1 லட்சம் கல்லூரிக்கு செலுத்தி விட்டு மாற்றுச்சான்றிதழ் வாங்கிச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.