ஓரை அறிந்து நடந்தால், ஓயாத வெற்றி கிட்டும்!

 

ஓரை அறிந்து நடந்தால், ஓயாத வெற்றி கிட்டும்!

சுபகாரியங்கள் செய்ய மற்றும் புதிதாக எந்த பணிகளையுமோ தொடங்க ஜோதிடத்தில் ஓரைகள் மிக முக்கியமானதாக பார்க்கப்படும். குறிப்பிட்ட ஜாதகரின் லக்னம். ராசிக்கு அடுத்து சுபஓரை என்கிற ஒருமணி நேரம் மிக முக்கியமானதாகும். அந்த வகையில் ஒவ்வொரு ஓரையிலும் செய்ய வேண்டிய, செய்யக்கூடாதவற்றைப் பார்க்கலாம்!

ஓரை அறிந்து நடந்தால், ஓயாத வெற்றி கிட்டும்!

சூரிய ஓரை!

சொந்த வீட்டிலோ, வாடகை வீட்டிலோ பால் காய்ச்சக் கூடாது. புது வீட்டில் குடி ஏறக்கூடாது. ஒப்பந்தகளில் கையெழுத்திட கூடாது.

ஓரை அறிந்து நடந்தால், ஓயாத வெற்றி கிட்டும்!

சந்திர ஓரை!

தேய் பிறையில் சந்திர ஓரையை தவிர்க்க வேண்டும். சொத்து சம்பந்தமாக பேசகூடாது.

செவ்வாய் ஓரை!

கடன் வசூல் செய்ய போகக்கூடாது. குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் கூடாது. பெண் பார்க்கும் வைபவங்களை தவிர்க்கவேண்டும் .

ஓரை அறிந்து நடந்தால், ஓயாத வெற்றி கிட்டும்!

புதன் ஓரை!

பெண்பார்க்கும் சம்பவம் கூடாது. வீடு, நிலம் பற்றி பேச கூடாது. சொத்துகளை பார்வையிடக்கூடாது.

குரு ஓரை!

முதல் முதலில் சந்திக்கும் ஒருவருக்கு விருந்து வைக்க கூடாது. புது மண தம்பதிகளுக்கு விருந்து, உபசாரம் செய்யகூடாது.

சுக்கிர ஓரை!

ஓரை அறிந்து நடந்தால், ஓயாத வெற்றி கிட்டும்!

நகை இரவல் கொடுக்க கூடாது . குடும்ப பிரச்சனைகளை பேசக் கூடாது. துக்கம் விசாரிக்ககூடாது.

சனி ஓரை!

நோய்க்கு முதன் முதலாக மருந்து சாப்பிடகூடாது. மருத்துவரை சந்திக்க கூடாது. பிரயாணம் செல்ல கூடாது. வெளியூர் செல்ல டிக்கெட் முன்பதிவு கூடாது. துக்கம் விசாரிக்க கூடாது.

ஓரைகளை கடைபிடிப்பவர்கள் யாரும் வெற்றிகொள்ள முடியாது என்பது சித்தர்கள் வாக்கு. அதை கடைபிடித்து வாழ்க்கையில் வெற்றி பெறுவோம்

-ஷாலினி