’’விவசாயிகள் சுட்டிக் காட்டும் திருத்தங்களை சரி செய்யாவிட்டால்….’’-தமிமுன் அன்சாரி விடுக்கும் எச்சரிக்கை

 

’’விவசாயிகள் சுட்டிக் காட்டும் திருத்தங்களை  சரி செய்யாவிட்டால்….’’-தமிமுன் அன்சாரி விடுக்கும் எச்சரிக்கை

விவசாயிகள் உற்பத்தி வணிகம் மற்றும் வர்த்தக(மேம்பாடு மற்றும் வசதி) மசோதா 2020, விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள்(அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) மசோதா 2020, அத்தியாவசிய பொருட்கள்(திருத்தம்) மசோதா 2020 என்று விவசாயிகள் மற்றும் விவசாயத்துறையை சார்ந்த சட்ட மசோதாக்கள் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே மக்களவையில் நிறைவேற்றப்பட்டதற்கு நாடெங்கிலும் எதிர்ப்பு வலுக்கிறது. அதனால், விவசாயிகள் சுட்டிக் காட்டும் திருத்தங்களை செய்தபிறகுதான் விவசாய மசோதாக்களை மாநிலங்களவையில் தாக்கல் செய்ய வேண்டும் என்கிறார் மஜக பொதுச்செயலாளரும், நாகை எம்எல்ஏவுமான மு.தமிமுன் அன்சாரி.

’’விவசாயிகள் சுட்டிக் காட்டும் திருத்தங்களை  சரி செய்யாவிட்டால்….’’-தமிமுன் அன்சாரி விடுக்கும் எச்சரிக்கை

மேலும், ‘’மத்தியில் ஆளும் பாஜக அரசு, விவசாயம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மூன்று மசோதாக்களும் கடும் அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது. இவை சாதாரண விவசாயிகளை கார்பெட்களின் நவீன வலையில் சிக்க வைக்கிறது. விவாசாயிகளுக்கு உதவுகிறோம் என்ற பெயரில் அவர்களுடைய நலன்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் வகையில் இதில் பல அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன. பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் முன்பு நமது விவசாயிகள் கைகட்டி நிற்கும் நிலையை இம்மசோதாக்கள் ஏற்பட்டித்தியிருக்கிறது.

இதுகுறித்து மாநில அரசுகளிடமும், விவசாய பிரதிநிதிகளிடமும் கலந்து ஆலோசிக்காமல் மத்திய அரசு அவசரப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. இம்மசோதாக்களை அதிமுக ஆதரித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அவர்கள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றி கொள்ள வேண்டும்’’என கேட்டுக்கொண்டுள்ளார்.

’’விவசாயிகள் சுட்டிக் காட்டும் திருத்தங்களை  சரி செய்யாவிட்டால்….’’-தமிமுன் அன்சாரி விடுக்கும் எச்சரிக்கை

இதுகுறித்த அறிக்கையில் அவர் மேலும், ‘’விவசாயிகள் சுட்டிக் காட்டும் திருத்தங்களை மேற்கொண்ட பிறகே இம்மசோதாக்களை மாநிலங்கள் அவையில் மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இல்லையேல் நாடு தழுவிய அளவில் விவசாயிகளின் பெரும் போராட்டத்தை மத்திய அரசு சந்திக்க நேரிடும் ’’ என எச்சரித்துள்ளார்.