ஐசிஎப் தீ விபத்து : ஆர்பிஎஃப் வீரர் தூக்கிட்டு தற்கொலை!

 

ஐசிஎப் தீ விபத்து : ஆர்பிஎஃப் வீரர் தூக்கிட்டு தற்கொலை!

சென்னையில் ஆர்பிஎஃப் வீரர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐசிஎப் தீ விபத்து : ஆர்பிஎஃப் வீரர் தூக்கிட்டு தற்கொலை!

சென்னை ஐசிஎப் தீ விபத்தின் போது இரவு நேர பணியில் இருந்த ஆர்பிஎஃப் வீரர் காஜா மைதீன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தீ விபத்து குறித்து தன்னிடம் விசாரணை நடத்துவார்கள் என்ற அச்சத்தில் ஆர்பிஎஃப் வீரர் காஜா மைதீன் தனது சட்டையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ஐசிஎப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஐசிஎப் தீ விபத்து : ஆர்பிஎஃப் வீரர் தூக்கிட்டு தற்கொலை!

இதனிடையே சென்னை ஐசிஎப் ரயில் பெட்டி இணைப்பு தொழிற்சாலை, நியூ ஆவடி சாலை அருகே அமைந்துள்ளது. இதன் எலக்ட்ரிக் குடோனில் நேற்று நள்ளிரவு தீ பிடித்தது. மளமளவென பரவிய தீயினால் அப்பகுதி முழுவதும் புகைமண்டலமாக மாறியது. இதையடுத்து அங்கு சுமார் 15ற்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் வந்து தீயை 6 மணிநேரம் போராடி அணைத்தனர். இதில் எலக்ட்ரிக் பொருட்கள் எரிந்து நாசமாகின. தீ விபத்தின் போது ஆர்பிஎஃப் வீரர் காஜா மைதீன் இரவு நேர பணியில் இருந்தது கவனிக்கத்தக்கது.