‘எனக்குத்தான் அதிக ஓட்டுகள் கிடைச்சுது’ முதல்லேருந்து ஆரம்பிக்கும் ட்ரம்ப்

 

‘எனக்குத்தான் அதிக ஓட்டுகள் கிடைச்சுது’ முதல்லேருந்து ஆரம்பிக்கும் ட்ரம்ப்

அமெரிக்கத் தேர்தல் முடிவடைந்து 40 நாட்களுக்கும் மேலாகி விட்டது. ஆனால், அதிபர் சர்ச்சை இன்னும் முழுமையாக ஓய்ந்த பாடில்லை. நவம்பர் 3-ம் தேதி அமெரிக்காவில் அடுத்த அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. அதில் தற்போதைய அதிபர் ட்ரம்ப் குடியரசு கட்சி சார்பிலும், ஜனநாயக் கட்சி சார்பில் ஜோ பைடனும் போட்டியிட்டார்கள்.

அமெரிக்க அதிபராக எலெக்ட்ரால் காலேஜ் வாக்குகள் 270 எடுக்க வேண்டும். ஜோ பைடன் 306 வாக்குகள் பெற்றுவிட்டார். இதனால், ஜோ பைடன் அதிபராவது உறுதியாகியுள்ளது. ஆனாலும், பல மாநிலங்களில் ஜோ பைடன் வென்றதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடினார் தற்போதைய அதிபர் ட்ரம்ப். ஆனபோதும், பல இடங்களிலிருந்தும் ட்ரம்ப்க்கு எதிராகவே தீர்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன.

‘எனக்குத்தான் அதிக ஓட்டுகள் கிடைச்சுது’ முதல்லேருந்து ஆரம்பிக்கும் ட்ரம்ப்

பென்சில்வேனியா, ஜியார்ஜியா, டெக்ஸாஸ் மாகாணங்களின் தேர்தல் முடிவு மாறினால் தனக்கு மீண்டும் அதிபராகும் வாய்ப்பு அமையும் என டொனால்டு டரம்ப் நினைத்தார். ஆனால், பென்சில்வேனியா, ஜியார்ஜியா மாகாணங்களில் ட்ரம்பின் மேல்முறையீடுகள் தள்ளுபடி செய்யப்பட்டன.

ஜோ பைடன் ஜனவரி மாத இறுதியில் அதிபராகப் பதவி ஏற்க உள்ளார். இந்நிலையில் ஒரு தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்த ட்ரம்ப், ‘இந்த அமெரிக்க தேர்தலில் எனக்குத்தான் அதிகமான ஓட்டுகள் கிடைத்தன. அப்பறம் எப்படி ஜோ பைடன் அதிபராகிறார்? அவர் சட்டத்திற்குப் புறம்பாகவே அதிபராகிறார்” என்று ஆரம்பித்த இடத்திற்கு வந்து நிற்கிறார்.

‘எனக்குத்தான் அதிக ஓட்டுகள் கிடைச்சுது’ முதல்லேருந்து ஆரம்பிக்கும் ட்ரம்ப்

ட்ரம்பின் இந்த பிடிவாதம், ஜனவரி இறுதியில் பைடன் பதவி ஏற்கும் வரை நீடிக்கும் என்றே தெரிகிறது.