“பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்கு இன்னும் சம்பளமே தரவில்லை” : நடிகை கஸ்தூரி

 

“பிக்பாஸ்  நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்கு இன்னும் சம்பளமே தரவில்லை” : நடிகை கஸ்தூரி

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கான சம்பளம் இன்னும் தனக்கு வழங்கப்படவில்லை என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

“பிக்பாஸ்  நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்கு இன்னும் சம்பளமே தரவில்லை” : நடிகை கஸ்தூரி

தமிழகத்தில் பல்வேறு வீடுகளில் மீண்டும் பிக் பாஸ் ஜுரம் அடிக்க தொடங்கியுள்ளது. கொரோனா காரணமாக தள்ளிப்போன பிக் பாஸ் நிகழ்ச்சி வரும் 4 ஆம் தேதி முதல் ஆரம்பமாகிறது. வழக்கம் போல் நடிகர் கமல் ஹாசனே இந்த சீசனையும் தொகுத்து வழங்குகிறார்.

இந்நிலையில் நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஓராண்டாகியும் தனக்கான சம்பளம் தரவில்லை என்று குற்றச்சாட்டியுள்ளார். இதை கண்ட நெட்டிசன்கள் பலர் கஸ்தூரிக்கு ஆதரவாக கருத்து கூறினால் சிலரோ எதிர்மறை விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். ஓராண்டு கழித்து இப்படி ஒரு புகாரை கூறுவது ஏன்? இதுவும் வீண் விளம்பரத்திற்காகவா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.