“தா.பாண்டியன் காலமான செய்தியறிந்து வேதனையடைந்தேன்” : முதல்வர் பழனிசாமி

 

“தா.பாண்டியன் காலமான செய்தியறிந்து வேதனையடைந்தேன்” : முதல்வர் பழனிசாமி

பொதுவுடைமை தலைவர் தா.பாண்டியன் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

“தா.பாண்டியன் காலமான செய்தியறிந்து வேதனையடைந்தேன்” : முதல்வர் பழனிசாமி

மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 89. சிறுநீரக செயலிழப்பு, சிறுநீரக தொற்று காரணமாக சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் நாளை மதுரையில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. சென்னை அண்ணாநகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள தா.பாண்டியன் உடல் மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை தி.நகரில் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. இந்த சூழலில் இந்த நிலையில் தா.பாண்டியனின் மறைவுக்கு துணை முதல்வர் ஓபிஎஸ், திமுக தலைவர் முக ஸ்டாலின், இந்திய கம்யூ. பொதுச்செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்

இந்நிலையில் முதல்வர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் , “முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான சகோதரர் திரு.தா.பாண்டியன் அவர்கள் காலமான செய்தியறிந்து அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். அவரது குடும்பத்தாருக்கும், கட்சியினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து அன்னாரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.