`குழந்தைகள் ஏன் சிவப்பாக பிறந்தாங்க?; நடத்தையில் சந்தேகம்!’- மனைவியை கழுத்தை நெரித்துக் கொன்ற கணவன்

 

`குழந்தைகள் ஏன் சிவப்பாக பிறந்தாங்க?; நடத்தையில் சந்தேகம்!’- மனைவியை கழுத்தை நெரித்துக் கொன்ற கணவன்

மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரின் கழுத்தை நெரித்து கணவன் கொலை செய்துள்ளார். இந்த வேதனையான சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் நடந்துள்ளது.

`குழந்தைகள் ஏன் சிவப்பாக பிறந்தாங்க?; நடத்தையில் சந்தேகம்!’- மனைவியை கழுத்தை நெரித்துக் கொன்ற கணவன்

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே அசிக்காடு கிராமத்தைச் சேர்ந்த ஐயப்பன் (28)- அகிலா தம்பதி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டது. ஐயப்பன் கார் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். இந்த தம்பதிக்கு 6 வயதில் மகனும், 4 வயதில் மகளும் உள்ளனர். மதுபானத்துக்கு அடிமையான ஐயப்பனுக்கு தனது இரண்டு குழந்தைகளும் சிகப்பாக பிறந்துள்ளது. இது அவருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். ஐயப்பன் வீட்டின் அருகில் அகிலாவின் தாய் வீடு இருப்பதால் அங்கு சென்று விடுவார்; பின்னர் அவர்கள் சமாதானப்படுத்தி அகிலாவை கணவர் வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள். இது வழக்கமாக நடந்துள்ளது.

இதனிடையே, கடந்த 18ம் தேதி காலை, வீட்டில் அகிலா மயக்கமடைந்து கிடப்பதாக அவரது பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதறியடித்து ஓடி வந்த அவர்கள் அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனால், மகளின் உடலை பார்த்து கதறி அழுத பெற்றோர், மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறிய குத்தாலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

`குழந்தைகள் ஏன் சிவப்பாக பிறந்தாங்க?; நடத்தையில் சந்தேகம்!’- மனைவியை கழுத்தை நெரித்துக் கொன்ற கணவன்

இதையடுத்து, ஐயப்பனைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது, போதையில் மனைவியின் கழுத்தை கயிற்றால் இறுக்கிக் கொலை செய்ததாக கூறியுள்ளார். மேலும், குழந்தைகள் சிகப்பாக பிறந்ததால் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியைக் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து, ஐயப்பன் மீது கொலை வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

குழந்தைகள் சிவப்பாக பிறந்ததற்காக மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை கணவன் கொலை செய்த சம்பவம் இந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.