காதலன் கொடுத்த ஐடியா; கணவன், 3 குழந்தைகளுக்கு மாம்பழ ஜூஸில் விசம் கலந்து கொடுத்த இளம்பெண்

 

காதலன் கொடுத்த ஐடியா; கணவன், 3 குழந்தைகளுக்கு மாம்பழ ஜூஸில் விசம் கலந்து கொடுத்த இளம்பெண்

காதலனுடன் உல்லாசமாக வாழ்வதற்கு இடையூறாக இருப்பதாக கருதி கணவன் மற்றும் மூன்று குழந்தைகளுக்கு ஜுஸில் விஷம் கலந்து கொடுத்த இளம்பெண் செயல் பெரும் அதிர்சியை ஏற்படுத்துகிறது.

காதலன் கொடுத்த ஐடியா; கணவன், 3 குழந்தைகளுக்கு மாம்பழ ஜூஸில் விசம் கலந்து கொடுத்த இளம்பெண்

எகிப்து நாட்டின் க்யூனா பகுதியில் வசித்து வரும் 26 வயது இளம்பெண், தனது கணவன் மற்றும் மூன்று குழந்தைகளுக்கு மாம்பழ ஜுஸில் விஷம் கலந்து கொடுத்ததால், 7,8,9 வயதிலான மூன்று குழந்தைகளும் உயிரிழந்து விட்டனர். கணவன் மட்டும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார்.

இதையடுத்து காலாவதியான ஜூஸை அருந்தியதால் அவர்கள் இறந்ததாக போலீசில் இளம்பெண் சொல்ல அதுவே ஊடகங்களிலும் பரபரப்பு செய்தியாக வெளியானது. அந்த இளம்பெண்ணின் நடவடிக்கை மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை மீண்டும் அழைத்து துருவி துருவி விசாரித்ததில், வேறொரு ஆணுடன் தனக்கு கள்ள உறவு தொடர்பு இருப்பதாகவும் அவருடன் உல்லாசமாக இருப்பதற்கு கணவனும் குழந்தைகளும் இடையூறாக இருந்ததால், காதலனின் ஆலோசனைப்படி நான்கு பேருக்கும் ஜூஸில் விஷம் கலந்து கொடுத்ததா சொல்லி அதிர வைத்திருக்கிறார்.

காதலன் கொடுத்த ஐடியா; கணவன், 3 குழந்தைகளுக்கு மாம்பழ ஜூஸில் விசம் கலந்து கொடுத்த இளம்பெண்

இதையடுத்து போலீசார் அந்த இளம்பெண்ணை கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள நிலையில் கணவர் மற்றும் ஆபத்தான நிலை கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.