மனைவி மீது ஆசிட் ஊற்றிய கணவன்!

 

மனைவி மீது ஆசிட் ஊற்றிய கணவன்!

சேலத்தில் குடும்பத்தகராறு காரணமாக மனைவி மீது கணவன் ஆசிட் ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனைவி மீது ஆசிட் ஊற்றிய கணவன்!

சேலம் மாநகர் குகை பகுதியை சேர்ந்தவர் யேசுதாஸ். இவருடைய மனைவி ரேவதி(48). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததின் காரணமாக மனைவி ரேவதி, விவாகரத்து செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வந்தார்.

இந்நிலையில் இன்று மனைவி ரேவதி தனது தாயுடன் தனது சொந்த ஊருக்கு செல்வதற்காக சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது பின்னால் வந்த கணவர் யேசுதாஸ், மறைத்து வைத்திருந்த ஆசிட்டை ரேவதி மீது வீசினார். இதில் ரேவதியின் முதுகுப்பகுதி பாதிக்கப்பட்டது. இதனையடுத்து உடனடியாக ரேவதி சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சேலம் மாநகர போலீசார், ஆசிட் வீசிய யேசுதாசை தேடி வருகின்றனர்.