“நான் வெளியே போனதும் அவன் வீட்டுக்கு வரானே” -காண்டான கணவன் -கண்டமான காதலன்

 

“நான் வெளியே போனதும் அவன் வீட்டுக்கு வரானே” -காண்டான கணவன் -கண்டமான காதலன்

கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக வாலிபரை கொன்று கிணற்றில் உடலை கிணற்றில் வீசிய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

“நான் வெளியே போனதும் அவன் வீட்டுக்கு வரானே” -காண்டான கணவன் -கண்டமான காதலன்


.
தமிழகத்தின் காஞ்சீபுரம் மாவட்டம் சாலமங்கலம் நரியம்பாக்கத்தை சேர்ந்த 39 வயதான மணி என்பவருக்கு 32 வயதான மகாலட்சுமி என்ற மனைவியும் 2 குழந்தைகளும் இருக்கிறது . இந்நிலையில் மணியின் மனைவி மகாலட்சுமிக்கும் குன்றத்தூர் தாலுகா, அம்பேத்கர் தெருவை சேர்ந்த ராமுவுக்கும் 5 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இவர் படப்பை அருகே உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.இந்த கள்ள காதல் விவகாரம் மணிக்கு தெரியவர அவர் ராமுவையும், மனைவியையும் பலமுறை கண்டித்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரம் அடைந்த மணி ராமுவை தீர்த்துகட்ட திட்டம் தீட்டி, கடந்த 4-ந்தேதி போன் மூலம் ராமுவை மது குடிக்க அழைத்தார். அங்கு வந்த ராமு, மணி மற்றும் அவருடைய நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்தார். மது போதையில் கள்ளக்காதல் சம்பந்தமாக அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் முற்றியதையடுத்து ராமுவின் கழுத்தை கத்தியால் வெட்டி கொன்று , பாழடைந்த கிணற்றில் வீசி விட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்
இந்த கொலை பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு மணியை கைது செய்தனர். மேலும் தினேஷ் (21), வினோத் (20), பிரபாகரன் (23), பூவேந்திரன் (19), ஆகாஷ் (19), பரத்குமார் (20) ஹரிஷ் (20) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.