மச்சினியோடு பேசிய மனைவி -கோவப்பட்ட கணவர் -அடுத்து யூ ட்யூப் பிரபலத்தால் நேர்ந்த கதி.

 

மச்சினியோடு பேசிய மனைவி -கோவப்பட்ட கணவர் -அடுத்து யூ ட்யூப் பிரபலத்தால் நேர்ந்த கதி.

யூ ட்யூபில் பிரபலமான ஒருவர் மனைவியை கொலை செய்து விட்டதாக கைது செய்யப்பட்டார்

மும்பையைச் சேர்ந்த  ஜிதேந்திரா என்பவர் யூ ட்யூபில் பல வீடியோக்கள் வெளியிட்டு மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தார் .இவர் கடந்த மார்ச் மாதம் கோமல் என்ற பெண்ணை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார் .இருவரும் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்தனர் .இவர்களின் காதலை கோமலின் வீட்டில் ஏற்காததால் அந்த பெண் வீட்டை விட்டு ஓடி அவரை திருமணம் செய்து கொண்டார் .

மச்சினியோடு பேசிய மனைவி -கோவப்பட்ட கணவர் -அடுத்து யூ ட்யூப் பிரபலத்தால் நேர்ந்த கதி.

அதன் பிறகு அந்த கோமளின் கணவர் ஜிதேந்திரா  அந்த பெண்ணை கொடுமை  செய்ய தொடங்கினார் .இதனால் அந்த  பெண் தனக்கு நடக்கும் கொடுமைகளை பற்றி அவரின் சகோதரி ப்ரியாவிடம் கூறியுள்ளார் .இந்த விஷயம் அந்த கணவருக்கு தெரிந்து விட்டது .அதனால் அவர் கோமளிடம் அவரின் சகோதரியிடம் பேசக்கூடாது என்று கட்டளை போட்டார் .

ஆனால் அதையும் மீறி அவர் பேசியுள்ளார் .இந்த கணவன் மனைவி சண்டையின் விளைவாக அந்த பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று தூக்கில் இறந்து கிடந்தார் .அதன் பிறகு அந்த பெண்ணின் குடும்பத்தினர் போலீசில் அந்த ஜிதேந்திரா மீது மனைவியை கொலை செய்து விட்டதாக புகாரளித்தனர் .போலீசார் விசாரணை மேற்கொண்டு அந்த கணவர் ஜிதேந்திராவை கொலை வழக்கில் கைது செய்தனர் .மேற்கொண்டு போலீசார் விசாரித்து வருகின்றனர் .