மனைவியுடன் கள்ளத் தொடர்பு: இளைஞரை நடுரோட்டில் குத்திக் கொலை செய்த கணவன்!

 

மனைவியுடன் கள்ளத் தொடர்பு: இளைஞரை நடுரோட்டில் குத்திக் கொலை செய்த கணவன்!

ஆந்திர மாநிலத்தில் மனைவியுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த நபரை கணவன் குத்திக்கொன்ற சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தில் இருக்கும் ஓங்கோல் பகுதியில் வசித்து வருபவர் ஜோசப். இவரது மனைவிக்கும் தனுஷ் என்ற இளைஞருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்திருக்கிறது. இதனை ஜோசப் பலமுறை கண்டித்தும் அது தொடர்ந்த வண்ணமே இருந்துள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ஜோசப், பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று மனைவியின் மூலமாகவே தனுஷை வரவைத்திருக்கிறார்.

மனைவியுடன் கள்ளத் தொடர்பு: இளைஞரை நடுரோட்டில் குத்திக் கொலை செய்த கணவன்!

மூன்று பேரும் பெட்ரோல் பங்க் அருகே சந்தித்த நிலையில், எதிர்பாராத விதமாக ஜோசப் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை வைத்து தனுஷை சரமாரியாக குத்தியுள்ளார். அவ்வழியே சென்ற ஒருவரும், ஜோசப்பின் மனைவியும் ஜோசப்பை தடுத்தும் அவர் தனுஷை விடவில்லை. ஜோசப் குத்தியதால் படுகாயம் அடைந்த தனுஷ், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்திருக்கிறார்.

இதையடுத்து, தான் தனுஷ் என்ற நபரை கொலை செய்து விட்டதாகக் கூறி ஜோசப் அப்பகுதி காவல் நிலையத்தில் சரண் அடைந்திருக்கிறார். இச்சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அதன் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.