மனைவியிடம் மறைத்த கணவன் -கல்யாணத்துக்கப்புறம் கண்டுபிடித்த மனைவி -என்ன நடந்துச்சு தெரியுமா ?

 

மனைவியிடம் மறைத்த கணவன் -கல்யாணத்துக்கப்புறம் கண்டுபிடித்த மனைவி -என்ன நடந்துச்சு தெரியுமா ?

மன பிரச்சினை இருப்பதை மறைத்து தன்னை கல்யாணம் செய்து கொண்ட கணவன் மீது ஒரு மனைவி போலீசில் புகார் கூறியுள்ளார்.

மனைவியிடம் மறைத்த கணவன் -கல்யாணத்துக்கப்புறம் கண்டுபிடித்த மனைவி -என்ன நடந்துச்சு தெரியுமா ?

குஜராத்தின் அகமதாபாத்தைச் சேர்ந்த 40 வயது பெண் கிஞ்சல் ,சமூக ஊடகத்தின் மூலம் அபிஷக் என்பவரோடு நட்பு கொண்டு பழகினார் .அபிஷேக் லண்டனில் உள்ள ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார் .அதனால் அவரோடு சில காலம் பழகியதும் அவரின் வேலை மற்றும் சம்பளத்தின் காரணமாக அவரை இந்தியாவுக்கு வரச்சொல்லி திருமணம் செய்து கொண்டார் .

அதன் பிறகு அந்த அபிஷேக்கின் நடவடிக்கையில் நிறைய வித்தியாசம் தெரிந்தது .அவர் மனைவி மற்றும் உறவினர்களை அடிக்கடி தாக்க தொடங்கினார் .இதனால் அவரை அந்த கின்ஜால் அங்குள்ள  ஒருமன நல மருத்துவரிடம் கூட்டி சென்றார் .அப்போது அவரை  பரிசோதித்த டாக்டர் அவருக்கு மன கோளாறு இருப்பதை  கண்டுபிடித்து அதற்கு மாத்திரை கொடுத்து அனுப்பினார் .பின்னர் சில நாள் கழித்து அந்த பெண் கிஞ்சலுக்கு, தன்னுடைய  கணவன் ஏற்கனவே ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதையும் அந்த பெண் இவரின் மன பிரச்சினையால் பாதியிலே இவரை விட்டு விட்டு ஓடியதையும் கண்டுபிடித்தார் .இது பற்றி அவரின் கணவரிடம் அவர் கேட்ட போது அவர் சரியாக பதில் கூறாமல் ,லண்டனுக்கு சென்று விட்டார் .பின்னர் அந்த பெண் அவரின் குடும்பத்தரிடம் கேட்ட போது அவர்களும் அது பற்றி ஏதும் கூறாமல் நழுவினார்கள் .அதனால் அந்த கின்ஜால் அங்குள்ள காவல் நிலையத்தில் தன்னுடைய கணவன் மற்றும் அவரின் குடும்பத்தார் மீது புகார் கூறினார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் .

மனைவியிடம் மறைத்த கணவன் -கல்யாணத்துக்கப்புறம் கண்டுபிடித்த மனைவி -என்ன நடந்துச்சு தெரியுமா ?
rep image