மூன்று கேமரா செட்டப் கொண்ட ‘ஹுவாய் என்ஜாய் 20 ப்ரோ’ ஸ்மார்ட்போன் அறிமுகம்

 

மூன்று கேமரா செட்டப் கொண்ட ‘ஹுவாய் என்ஜாய் 20 ப்ரோ’ ஸ்மார்ட்போன் அறிமுகம்

பெய்ஜிங்: மூன்று கேமரா செட்டப் கொண்ட ‘ஹுவாய் என்ஜாய் 20 ப்ரோ’ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் ‘ஹுவாய் என்ஜாய் 20 ப்ரோ’ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ஒரு 5ஜி ஸ்மார்ட்போன் ஆகும். வாட்டர்டிராப் ஸ்டைல் டிஸ்பிளே நாட்ச் இதில் இடம்பிடித்துள்ளது. குறைந்த வெளிச்சத்தில் கூட மென்பொருள் உதவியுடன் துல்லியமான புகைப்படங்களை எடுக்கும் மூன்று கேமரா கொண்ட ரியர் கேமரா செட்டப் இதில் உள்ளது. இதன் 6ஜிபி வெர்ஷன் 1999 சீன யுவான் (தோராயமாக ரூ.21,500) எனவும், 8ஜிபி வெர்ஷன் 2299 சீன யுவான் (தோராயமாக ரூ.24,800) எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  டார்க் ப்ளூ, கேலக்சி சில்வர், மேஜிக் நைட் பிளாக் ஆகிய நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன்கள் கிடைக்கிறது.

‘ஹுவாய் என்ஜாய் 20 ப்ரோ’ ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்களாக டுயல் நானோ சிம், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம், 6.5 இன்ச் ஃபுல் ஹெச்.டி டிஸ்பிளே, மீடியாடெக் டைமன்சிட்டி 800 பிராசஸர், 6ஜிபி மற்றும் 8ஜிபி ரேம், 128ஜிபி மெமரி, 48 எம்.பி ரியர் கேமரா செட்டப், 16 எம்.பி செல்பி கேமரா, 4000 எம்.ஏ.ஹெச் பேட்டரி, 22.5வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங், சைடு மவுன்ட் விரல்ரேகை சென்சார் மற்றும் இதர கனெக்டிவிட்டி ஆகியவை இடம்பெற்றுள்ளன.