திருஞானசம்பந்தரை கொலைக்காரர் என விமர்சித்த திருமாவளவன்! வெடித்தது அடுத்த சர்ச்சை!!

 

திருஞானசம்பந்தரை கொலைக்காரர் என விமர்சித்த திருமாவளவன்! வெடித்தது அடுத்த சர்ச்சை!!

பன்னிரு திருமுறைகளுள் முதல் மூன்று திருமுறைகளை அருளிச் செய்தவர் திருஞானசம்பந்தர். மூன்று வயது பாலகனாக ஞானம் பெற்ற சம்பந்தர், தன் வாழ்நாள் முழுமையும் சிவத் தலங்களை தரிசிப்பதையும் அவற்றைப் பற்றி பாடுவதையுமே தம் பணியாகக் கொண்டிருந்தார். சைவத்தையும் தமிழையும் அயல் மத ஆதிக்கத்தில் இருந்து மீட்ட தமிழாகரர் திருஞானசம்பந்தப் பெருமான்.

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், திருஞானசம்பந்தர் பற்றி அவதூறு பரப்பியதாக சொல்லப்படுகிறது. இதற்கு கண்டனம் தெரித்துள்ள இந்து மக்கள் கட்சி ஞானசம்பந்தப் பெருமானை களங்கப் படுத்த நினைக்கும் திருமாவளவனுக்கு உண்மை வரலாற்றை உரைக்கின்றோம் உணர்ந்து மன்னிப்புக் கோரவில்லை எனில் தமிழின துரோகம் புரிந்த குற்றத்திற்காக திருமாவளவனுக்கு எதிராக ஜனநாயக அறப்போராட்டங்களை நடத்துவோம் என எச்சரித்துள்ளது.

இந்நிலையில் பாஜகவின் மூத்த தலைவர் ஹெச் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், “ஞானசம்பந்தர் பெருமானை கொலைகாரர் என்று பேசியுள்ள தீயசக்தி சமூக விரோதி திருமாவளவனை தமிழக அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும். இந்து பெண்களை இழிவாகப் பேசிய நபர் இன்று திருஞானசம்பந்தர் பற்றி பேசியுள்ளது சமூக மோதலை ஏற்படுத்தும் திட்டமிட்ட செயல்.இதை அனுமதிக்க முடியாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.