மனிதகுலத்துக்கு கொரோனாவிலிருந்து எப்போது விடிவுகாலம் பிறக்கும்? – ஆராய்ச்சியாளர் கூறும் விளக்கம் இதோ!

 

மனிதகுலத்துக்கு கொரோனாவிலிருந்து எப்போது விடிவுகாலம் பிறக்கும்? – ஆராய்ச்சியாளர் கூறும் விளக்கம் இதோ!

கொரோனா இரண்டாம் அலை பரவல் இந்தியாவையே நிலைகுலைய வைத்துள்ளது. முந்தைய அலையை விட அதிவேகமாகப் பரவி வருவதால் வீட்டுக்குள்ளேயே மாஸ்க் அணிவது கட்டாயமாகியுள்ளது. முதல் அலையில் நகர்ப்புறங்களை மட்டும் தாக்கிய கொரோனா தற்போது கிராமப்புறங்களை நோக்கி நகர்ந்திருப்பது அச்சமடைய வைக்கிறது.
தினசரி கொரோனா பாதிப்பு 4 லட்சம் வரை சென்றது. ஆனால் இப்போது 3 லட்சத்துக்கும் கீழே குறைந்துள்ளது.

மனிதகுலத்துக்கு கொரோனாவிலிருந்து எப்போது விடிவுகாலம் பிறக்கும்? – ஆராய்ச்சியாளர் கூறும் விளக்கம் இதோ!

இப்படி குறைவதால் ஆறுதல் பட எதுவுமில்லை என்று கூறும் ஆராய்ச்சியாளர்கள் பெரும்பாலான மாநிலங்களில் பரிசோதனை அதிகப்படுத்தவில்லை என்பதால் குறைவான பாதிப்பு எண்ணிக்கை வருவதாகக் கூறுகிறார்கள். தொற்று குறைவதைச் சாதகமாகப் பயன்படுத்தி கொரோனா தடுப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிக்காவிட்டால் மூன்றாவது அலை வருவதை யாராலும் தடுக்க முடியாது என்கின்றனர்.

மனிதகுலத்துக்கு கொரோனாவிலிருந்து எப்போது விடிவுகாலம் பிறக்கும்? – ஆராய்ச்சியாளர் கூறும் விளக்கம் இதோ!

மனிதகுலத்தை ஆட்டிப்படைக்கும் கொரோனாவிலிருந்து எப்போது விடிவுகாலம் பிறக்கும் என்ற ஏக்கம் மக்களிடையே எழுந்திருக்கிறது. அதற்கு உலக சுகாதார அமைப்பின் தலைமை அறிவியலாளர் சௌம்யா சுவாமிநாதன் பதிலளித்துள்ளார். தனியார் ஊடக நிறுவனத்துக்குப் பேட்டியளித்த அவர், “இப்போது நாம் கடினமான காலகட்டத்தில் இருக்கிறோம். வைரஸ் எவ்வளவு காலம்இன்னும் இருக்கப் போகிறது என்பதைக் கணிப்பது கடினமான ஒன்றாகும். உலக மக்கள் தொகையில் 30 சதவீத மக்களுக்கு இந்த ஆண்டின் இறுதிக்குள் தடுப்பூசி போட்டுவிட்டால், நோயின் தீவிரத் தன்மையிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும்.

மனிதகுலத்துக்கு கொரோனாவிலிருந்து எப்போது விடிவுகாலம் பிறக்கும்? – ஆராய்ச்சியாளர் கூறும் விளக்கம் இதோ!

2022ஆம் ஆண்டில் 60 முதல் 80 சதவீத மக்களுக்கு தடுப்பூசி போட்டிருந்தால் இறப்புகள் வெகுவாகக் குறையும். மொத்த மக்கள் தொகையில் எவ்வளவு பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தால், வைரஸின் தாக்கம் குறையும் என்பது பற்றி இன்னும் துல்லியமாகக் கண்டறியப்படவில்லை. இருப்பினும் அடுத்த 6 முதல் 18 மாதங்கள் மிகவும் முக்கியமானவை. எவ்வளவு வேகமாக தடுப்பூசி செலுத்துகிறோம் என்பதைப் பொறுத்தே, பொருளாதார வளர்ச்சி சகஜ நிலைக்கு திரும்புவதும் அடங்கியிருக்கிறது. தடுப்பூசி பற்றாக்குறை உள்ளிட்ட தடைகள் இருந்தாலும் மக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்தும் வேகத்தை அதிகரிப்பது அவசியம்” என்றார்.