டெல்லியில் பெய்த கனமழை… வீடுகளை அடித்துச் சென்ற சோகம்!

 

டெல்லியில் பெய்த கனமழை… வீடுகளை அடித்துச் சென்ற சோகம்!

இன்று காலை முதல் டெல்லி மற்றும் சுற்று பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக டெல்லியின் ஐ.டி.ஓ பகுதியில் உள்ள சேரியில் வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.

சேரியில் உள்ள வீடுகள் தண்ணீரில் கவிழ்ந்து விழும் காட்சிகள் வெளியாகியுள்ளது.
மேலும் மற்றொரு வீடியோவில், அதே பகுதியில் ஒரு கழிவுநீர் வடிகால் விளிம்பில் ஒரு செங்கல் வீடு நொறுங்கிதண்ணீரோடு கரைந்து செல்லும் காட்சியும் வெளியாகியுள்ளது.

டெல்லியில் பெய்த கனமழை… வீடுகளை அடித்துச் சென்ற சோகம்!

இன்று காலை டெல்லியில் சின்னமான மிண்டோ பாலத்தின் கீழ் ஒரு சாலையின் அருகே ஒரு மனிதனின் உடல் தண்ணீரில் மிதந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பிக்-அப் டிரக் டிரைவரின் சடலம் புதுடெல்லி யார்டு பகுதியில் பணிபுரியும் டிராக்மேன் ஒருவரால் ரயில் தடத்தில் வேலை பார்த்த போது கண்டுபிடிக்கப்பட்டது.

வடமேற்கு இந்தியாவின் சில பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தனர்.