சொத்து தகராறில் முதியவர் படுகொலை

 

சொத்து தகராறில் முதியவர் படுகொலை

கிருஷ்ணகிரி

ஓசூர் அருகே சொத்து தகராறில் 70 வயது முதியவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒசூர் அடுத்த பாகலூரை சேர்ந்தவர்சாப்ஜான்(70). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் சொத்து பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்றிரவு சாலையில்நடந்துசென்ற சாப்ஜானை மர்மநபர்கள் சிலர் வழிமறித்து கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினர்.

சொத்து தகராறில் முதியவர் படுகொலை

இதில் பலத்த காயமடைந்த சாப்ஜானை அப்பகுதி மக்கள் மீட்டுதனியார் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவலின் பேரில் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்குஅனுப்பிய போலீசார், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய கொலையாளியை தேடி வருகின்றனர்.