தோட்டக்கலை பயிர்கள் காப்பீடு… விவசாயிகளுக்கு, தருமபுரி ஆட்சியர் அழைப்பு!

 

தோட்டக்கலை பயிர்கள் காப்பீடு… விவசாயிகளுக்கு, தருமபுரி ஆட்சியர் அழைப்பு!

தருமபுரி

தருமபுரி மாவட்டத்தில் காரீப் பருவத்திற்கு தோட்டக்கலை பயிர்களான சின்ன வெங்காயம், வாழை உள்ளிட்ட பயிர்களுக்கு விவசாயிகள் காப்பீடு செய்து பயன்பெறலாம் என ஆட்சியர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், தருமபுரி மாவட்டத்தில் திருந்திய பிரதம பயிர் காப்பீடு திட்டத்தில் காரீப் பருவத்திற்கு தோட்டக்கலை பயிர்களான சின்ன வெங்காயம், தக்காளி, கத்தரி, வாழை, வெண்டை ஆகியவற்றுக்கு காப்பீடு செய்ய விவசாயிகள் முன்வர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

தோட்டக்கலை பயிர்கள் காப்பீடு… விவசாயிகளுக்கு, தருமபுரி ஆட்சியர் அழைப்பு!

சின்ன வெங்காயம், தக்காளி, வெண்டை, கத்தரி ஆகிய பயிர்களுக்கு இம்மாதம் 31ஆம் தேதி வரை விவசாயிகள் அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா என்ற நிறுவனம் மூலம் காப்பீடு செய்து கொள்ளலாம். வாழை மற்றும் மஞ்சள் பயிர்களுக்கு செப்டம்பர் 15 வரை பயிர் காப்பீடு செய்யலாம்.

விவசாயிகள் செலுத்த வேண்டிய காப்பீடு தொகை ஒரு ஏக்கருக்கு சின்ன வெங்காய பயிருக்கு ரூ.1,589, தக்காளிக்கு ரூ.1,856, வெண்டைக்கு ரூ.849, கத்தரிக்கு ரூ.1,210, வாழைக்கு ரூ.8,380, மஞ்சள் பயிருக்கு ரூ.3,460. மேலும், தகவல்களுக்கு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர்களை அணுகி பயன்பெறவும், உழவன் செயலியில் இருந்தும் அறிந்து கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.