ராஜஸ்தானில் காதல் ஜோடி கவுரவ கொலை… கொடூரமாக அடித்து கொன்ற உறவினர்கள்..

 

ராஜஸ்தானில் காதல் ஜோடி கவுரவ கொலை… கொடூரமாக அடித்து கொன்ற உறவினர்கள்..

ராஜஸ்தான் மாநிலம் தோல்பூர் மாவட்டத்தில் உத்தர பிரதேச எல்லைக்கு அருகிலுள்ள ராஜகேதா தானா பகுதிக்கு அருகில் உள்ள கிராமம் லெய்கா தி தார். இந்த கிராமத்தை சேர்ந்த 20 வயதான பந்து நிஷாத் அந்த பகுதியில் இ மித்ரா கடையை நடத்தி வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்தவரும், அவரது உறவினருமான அனிதா நிஷாத்துக்கு இடையே காதல் மலர்ந்துள்ளது. இந்த தகவல் பெண்ணின் வீட்டாருக்கு தெரிந்ததும் இந்த காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ராஜஸ்தானில் காதல் ஜோடி கவுரவ கொலை… கொடூரமாக அடித்து கொன்ற உறவினர்கள்..

இருப்பினும் காதலர்கள் தொடர்ந்து சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று மதியம் பந்து நிஷாத்தும், அனிதா நிஷாத்தும் ஒரு வீட்டில் தனியாக இருந்துள்ளனர். இதனை கேள்விப்பட்ட அங்கு வந்த அனிதா நிஷாத்தின் உறவினர்கள் அவர்கள் இருவரையும் வெளியே இழுத்து வந்து கம்பு மற்றும் கோடாரிகளால் தாக்கினர். இதில் சம்பவ இடத்திலேயே பந்து நிஷாத் இறந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அனிதா நிஷாத் இறந்தார்.

ராஜஸ்தானில் காதல் ஜோடி கவுரவ கொலை… கொடூரமாக அடித்து கொன்ற உறவினர்கள்..

அந்த பகுதி போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்ததுடன் கொலை செய்யப்பட்ட பெண்ணின் மாமா ஒருவரை கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட காதலர்கள் இருவரும் ஒரே நீட்டிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள், ஒரே குலத்தை சேர்ந்தவர்கள் மற்றும் அவர்கள் இருவரது உறவு முறை அத்தை, மருமகன் போன்றவர்கள். இது இந்த கவுரவ கொலைக்கு காரணம் என சொல்லப்படுகிறது.