“கற்பழிச்சிட்டேன்னு கம்பி என்ன வைப்போம்” -டேட்டிங் ஆப் மூலம் நடக்கும் சீட்டிங்

 

“கற்பழிச்சிட்டேன்னு கம்பி என்ன வைப்போம்” -டேட்டிங் ஆப் மூலம் நடக்கும் சீட்டிங்

ஒரு டேட்டிங் ஆப் மூலம் பல பணக்காரர்களை பலாத்காரம் செய்ததாக மிரட்டி பல லட்சங்களை சம்பாதித்த பெண் உள்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்

“கற்பழிச்சிட்டேன்னு கம்பி என்ன வைப்போம்” -டேட்டிங் ஆப் மூலம் நடக்கும் சீட்டிங்

டெல்லியை சேர்ந்த ரோஹன் என்ற நபர் ‘ட்ரூலி மேட்லி’ என்ற டேட்டிங் ஆப் மூலம் அடிக்கடி பல பெண்களோடு அரட்டையடிப்பது வழக்கம் .அதன்படி அவர் அந்த ‘ஆப்”மூலம் சீமா என்ற பெண்ணை தொடர்பு கொண்டு பேசி வந்துள்ளார் .அப்போது இருவரும் சேர்ந்து ஒரு ஹோட்டலில் சந்திக்க முடிவு செய்தனர் .
அதன்படி கடந்த திங்கள் கிழமையன்று டெல்லி ரோகிணி பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் ரோஹன் சீமாவை சந்தித்தார் .அப்போது சீமா தன்னோடு ஜோதி மற்றும் சுனில் குமார் பால், சதேந்தர் சிங் ஆகியோரும் வந்திருப்பதாக கூறி அவர்களை ரோகனுக்கு அறிமுகம் செய்து வைத்தார் .
பிறகு அனைவரும் சேர்ந்து மது போதை ஏறியதும் ,ரோகனை உடனே ஐந்து லட்சம் ரூபாய் பணம் தரவில்லையென்றால் சீமாவை கற்பழித்ததாக, உன் மீது பலாத்கார புகார் போலீசில் கொடுப்போமென்று மிரட்ட தொடங்கினார்கள் .
இதனால் பயந்து போன ரோகன் அங்கிருந்து பாத்ரூம் போவதாக கூறி அவர்களிடமிருந்து தப்பி வந்து போலீசில் புகாரளித்தார் .போலீசார் மறைந்திருந்து அந்த ஹோட்டலுக்குள் அதிரடியாக நுழைந்து அந்த கூட்டத்தை சேர்ந்த பெண்கள், ஆண்கள் அனைவரையும் கைது செய்தார்கள் .பிறகு அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் இப்படி டேட்டிங் ஆப் மூலம் பல பணக்காரர்களை தொடர்பு கொண்டு அவர்களை பார்ட்டிக்கு வரவைத்து மிரட்டி பல லட்சங்கள் சம்பாதித்த விஷயம் வெளியே தெரிந்துள்ளது .அவர்களிடம் முக்கிய பிரமுகர்கள் பலர் சிக்கிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

“கற்பழிச்சிட்டேன்னு கம்பி என்ன வைப்போம்” -டேட்டிங் ஆப் மூலம் நடக்கும் சீட்டிங்