கனமழை எதிரொலி: காரைக்காலில் நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

 

கனமழை எதிரொலி: காரைக்காலில் நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

மன்னார் வளைகுடா பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருமாறும். தற்போது மன்னார் வளைகுடாவில் நிலை கொண்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மாண்டலமாக வலுவிழந்தாலும், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் கொட்டி தீர்த்த கன மழையால் பல்வேறு இடங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

கனமழை எதிரொலி: காரைக்காலில் நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
Rep Image

புயல் காரணமாக தொடர்ந்து கனமழை பெய்து கொண்டு இருப்பதால் நாளை (05.12.2020) சனிக்கிழமை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா அறிவித்துள்ளார். கனமழை காரணமாக நேற்றும், இன்றும் காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடதக்கது.