ரயில் டிக்கெட் புக் செய்தால் இந்தியில் மெசேஜ் : எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியன் கண்டனம்!

 

ரயில் டிக்கெட் புக் செய்தால் இந்தியில் மெசேஜ்  : எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியன் கண்டனம்!

ரயில் டிக்கெட்டுகள் பதிவு செய்தால் இந்தியில் குறுஞ்செய்தி வருவதற்கு எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ரயில் டிக்கெட் புக் செய்தால் இந்தியில் மெசேஜ்  : எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியன் கண்டனம்!

தமிழகத்திலிருந்து ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்தால் இந்தியில் குறுஞ்செய்தி வருவதாக புகார் எழுந்துள்ளது. ஆங்கிலத்தில் குறுஞ்செய்தி வந்து கொண்டிருந்த நிலையில் இந்தியில் வந்துள்ளதாக ரயில் பயணிகள் நல சங்கம் மத்திய ரயில்வே அமைச்சகத்திடம் புகார் அளித்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் தனது ட்விட்டர் பக்கத்தில், “தொடர்வண்டி பயணச்சீட்டு பதிவு செய்தவுடன், உறுதிப்படுத்துதல் குறுஞ்செய்தி, இந்தியில் வருகிறது; இந்தியாவில் பல மாநிலங்களில் பெரும்பாலான மக்களுக்கு இந்தி தெரியாது. இதில் கவனம் செலுத்தி, அந்தந்த மாநில மொழிகளில் உறுதிப்படுத்துதல் செய்தியை அனுப்ப வேண்டுகிறேன். இது போல், அனைத்துத் தளங்களிலும், இந்தியைத் திணித்து, மக்களைக் கொடுமைப்படுத்துவதை நிறுத்திவிட்டு, அந்தந்த மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.