தந்தை மகன் உயிரிழந்த விவகாரம்..டிஜிபி, தூத்துக்குடி எஸ்.பி ஆஜராக உத்தரவு!

 

தந்தை மகன் உயிரிழந்த விவகாரம்..டிஜிபி, தூத்துக்குடி எஸ்.பி ஆஜராக உத்தரவு!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் வசித்து வந்தவர் ஜெயராஜ். அவரது மகன் பென்னிஸ். இவர்கள் இருவரும் பழைய பேருந்துநிலையம் காமராஜர் சிலை அருகே செல்போன் மற்றும் மரக்கடை வைத்திருந்த நிலையில், கடந்த 19 ஆம் தேதி ஊரடங்கால் கடையை அடைக்குமாறு போலீசார் கூறியுள்ளனர். அதனால் போலீசாருக்கும் இவர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதால், இரண்டு பேரும் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் பூதாகரமாக உருவெடுத்திருக்கிறது.

தந்தை மகன் உயிரிழந்த விவகாரம்..டிஜிபி, தூத்துக்குடி எஸ்.பி ஆஜராக உத்தரவு!

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 2 எஸ்ஐகளை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி சஸ்பெண்ட் செய்தார். சிறையில் அவர்கள் உயிரிழந்தது மக்களிடையே பெரும் எதிர்ப்பை கிளப்பி வரும் நிலையில், நாளை முழு கடையடைப்பு என்று தமிழ்நாடு வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் மதுரை உயர்நீதிமன்றக் கிளை தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரிக்க உள்ளது.

இந்த நிலையில் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதனை விசாரித்த நீதிபதிகள், இன்று பிற்பகல் 12.30 மணிக்கு தமிழக போலீஸ் டிஜிபி மற்றும் தூத்துக்குடி எஸ்பி ஆகியோர் காணொளி வாயிலாக ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.