ஐபிஎல் டைட்டில் ஸ்பான்ஸராக போட்டிபோடும் 5 நிறுவனங்கள் இவைதான்!

 

ஐபிஎல் டைட்டில் ஸ்பான்ஸராக போட்டிபோடும் 5 நிறுவனங்கள் இவைதான்!

ஐபிஎல் போட்டிகளின் வருகை கிரிக்கெட்டின் முகத்தையே மாற்றி அமைத்துவிட்டது. அது ஒரு விளையாட்டுப் போட்டி என்பதைத் தாண்டி மாபெரும் கேளிக்கை கொண்டாட்டாமாக மாறிவிட்டது.

மூன்று மணி நேர விறுவிறுப்பான சினிமாவைப் பார்க்கும் மனநிலைக்கு ஐபிஎல் போட்டி பார்வையாளர்களை மாற்றிவிட்டது என்றும் சொல்லலாம்.

கேளிக்கை கொண்டாட்டம் என்றாலே பணமும் அங்கு விளையாடும். ஐபிஎல் போட்டிகளில் கோடிக்கணக்கில் லாபம் கிடைக்கிறது. அதற்கு முக்கியமான காரணம் ஸ்பான்ஸர்ஸ்தான்.

ஐபிஎல் டைட்டில் ஸ்பான்ஸராக போட்டிபோடும் 5 நிறுவனங்கள் இவைதான்!

ரசிகர்கள் மைதானத்திற்குள் வர எடுக்கு டிக்கெட் தொகை எல்லாம் இதில் செலவழிக்கும் பணத்தில் மிகச் சொற்பமே. அதனால் விளம்பரதாரர்கள் இல்லாது இந்தப் போட்டிகள் இல்லை.

போட்டியின் விறுவிறுப்பு கூடகூட விளம்பரதாரர்களின் வருகையை அதிகரித்தது. கடந்த ஆண்டு ஐபிஎல்-ன் டைட்டில் ஸ்பான்ஸர் விவோ.

ஆனால், சமீபகாலமாக சீனாவுக்கும் இந்தியாவுக்கும் கடும் உரசல் இருக்கிறது. எல்லையில் அத்துமீறியதாக நாடு முழுக்க விவாதம் நடந்தது. அதனால் ஐபிஎல் டைட்டில் ஸ்பான்ஸராக விவோ நீடிப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

ஐபிஎல் டைட்டில் ஸ்பான்ஸராக போட்டிபோடும் 5 நிறுவனங்கள் இவைதான்!

இந்நிலையில் டைட்டில் ஸ்பான்ஸரிலிருந்து விவோ நிறுவனம் விலகியது. அது தானாகவே விலகிக்கொண்டது என்றாலும் இந்த அழுத்தமே முக்கியக் காரணம் எனச் சொல்லப்பட்டது.

விவோ விலகியதால் ஐபிஎல்-ன் அடுத்த டைட்டில் ஸ்பான்ஸர் யார் என்ற கேள்வி எழுந்தது. போட்டிகள் தொடங்க இன்னும் மிகக் குறுகிய காலமே இருப்பதால் பெரும் தொகை கொடுக்க யார் முன்வருவார்கள் என்ற யோசனையும் இருந்தது.

சென்ற ஆண்டில் டைட்டில் ஸ்பான்ஸரக இருந்த விவோ பிசிசிஐக்கு 440 கோடி ரூபாய் கொடுத்தது. ஆனால், இந்த ஆண்டு 300 கோடி ரூபாய் கொடுத்தால் போதும் என்று பிசிசிஐ அறிவித்தது.

ஐபிஎல் டைட்டில் ஸ்பான்ஸராக போட்டிபோடும் 5 நிறுவனங்கள் இவைதான்!

பிசிசிஐ விண்ணப்பிக்க அறிவித்ததும் பலரும் ஆர்வத்துடன் விண்ணப்பித்திருக்கிறார்களாம். ஏனெனில் ஐபிஎல் பார்வையாளர்கள் கோடிக்கணக்கில் இருக்கிறார்கள். அதனால் தங்கள் நிருவனம் தயாரிக்கும் பொருள்களை எளிதில் எல்லோரிடமும் கொண்டு சேர்த்து விட முடியும் என நினைக்கிறார்கள்.

பதஞ்சலி, டாடா குரூப்ஸ், ரிலையன்ஸ் (ஜியோ), பைஜூஸ், உன் அகாடமி ஆகிய ஐந்து நிறுவனங்களே ஐபிஎல் டைட்டில் ஸ்பான்ஸர் போட்டிக்களத்தில் முன்னணியில் நிற்கிறார்கள்.

ஐபிஎல் டைட்டில் ஸ்பான்ஸராக போட்டிபோடும் 5 நிறுவனங்கள் இவைதான்!

இவர்களில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் அணிதான் மும்பை இந்தியன்ஸ். டாடா நிறுவனத்திற்கு கிடைக்க அதிக வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. பெரும் தொகை கொடுக்க இந்த ஐந்து நிறுவனங்களால் முடியும் என்றாலும் எந்த நிறுவனத்திற்கு அந்த வாய்ப்பு கிடைக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.