‘சென்னையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு’ 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்!

 

‘சென்னையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு’ 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்!

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வெப்பச்சலனத்தால் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. சில நாட்களுக்கு முன்னர் புதுக்கோட்டை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் பல நீர் நிலைகள் நிரம்பியதால் பாசனத்துக்கு நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இன்று காலை சென்னையின் புறநகர் பகுதிகளில் விட்டு விட்டு லேசான மழை பெய்தது. இந்த நிலையில் தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

‘சென்னையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு’ 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர் மற்றும் திருச்சி ஆகிய 5 மாவட்டங்களிலும் மிக கனமழைக்கு பெய்யக் கூடும் என்றும் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், அதிகபட்சமாக மஞ்சளாறில் 11 செ.மீ, பெரியகுளத்தில் 10 செ.மீ, தல்லாகுளத்தில் 9 செ.மீ மழை பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.