‘சென்னை மக்களே உஷார்’ இந்த 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

 

‘சென்னை மக்களே உஷார்’ இந்த 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

‘சென்னை மக்களே உஷார்’ இந்த 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழக கடலோர பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், காரைக்கால் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், அடுத்த 48 மணி நேரத்துக்கு மழை தொடர வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. அதே போல, சென்னையில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் பிற இடங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

‘சென்னை மக்களே உஷார்’ இந்த 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

மேலும், மணிக்கு 40 – 50 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் 2 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக மீன்வளத்துறை விடுத்த எச்சரிக்கையின் பேரில் இன்றும் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.