சென்னை- தூத்துக்குடி! நாளை முதல் வெளுத்து வாங்கவுள்ள மழை!!

 

சென்னை- தூத்துக்குடி! நாளை முதல் வெளுத்து வாங்கவுள்ள மழை!!

நாளை அதிகாலை முதல் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் (சென்னை முதல் தூத்துக்குடி வரை) மழை துவங்கும் என்றும் படிப்படியாக நாளை மாலை முதல் கன மழையாக அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை- தூத்துக்குடி! நாளை முதல் வெளுத்து வாங்கவுள்ள மழை!!

நாளை முதல் 13 ஆம் தேதி வரை கிழக்கு திசையிலிருந்து வரும் ஈரக்காற்றால் நாளை அதிகாலை முதல் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யத்துவங்கும். நாளை மதியம் அல்லது மாலை முதல் இது கன மழையாக அதிகரிக்கும். இந்த கனமழை விட்டுவிட்டு வரும் 13ஆம் தேதி வரை நீடிக்கும். தீபாவளி அன்று மழை மீண்டும் குறையும் பின்னர்.15 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரையிலும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது வரும் 14ஆம் தேதி இரவு முதல் மீண்டும் கிழக்கு திசையிலிருந்து வரும் ஈரக்காற்றால், கன மழை துவங்கும் என்றும், இந்த மழை 17ம் தேதி வரை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் 18 ஆம் தேதி வரை வட மற்றும் தென் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 11ஆம் தேதி இரவு முதல் மழை துவங்கும் எனவும் மிதமானது முதல் கன மழையாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடலோர மாவட்டங்களில் மழை சற்று குறைவாக இருக்கும்.