இந்த மாவட்ட மக்களுக்கு ஓர் நற்செய்தி…!

 

இந்த மாவட்ட மக்களுக்கு ஓர் நற்செய்தி…!

3 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த மாவட்ட மக்களுக்கு ஓர் நற்செய்தி…!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் , தென் தமிழக மாவட்டங்கள் ,உள் மாவட்டங்கள் ,டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த மாவட்ட மக்களுக்கு ஓர் நற்செய்தி…!

நாளை முதல் வருகின்ற 8ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் ,தென் தமிழக மாவட்டங்கள்,உள் மாவட்டங்களில் டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது . இந்த மழையானது வருகின்ற 8 மற்றும் 9ம் தேதிகளிலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாவட்ட மக்களுக்கு ஓர் நற்செய்தி…!

கடலோர மாவட்டங்களில் காற்றின் ஒப்பு ஈரப்பதம் 50 முதல் 90 விழுக்காடு வரை உள்ளதால் காற்றின் இயல்பான வெப்பநிலையானது 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாகவும் காணப்படும் . இதன் காரணமாக மாலை முதல் காலை வரை வெக்கையாகவும், இயல்புக்கு மாறாகவும் அதிகமாக வியர்க்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . சென்னையை பொருத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் . அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.