தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ‘இந்த மாவட்டங்களில்’ கனமழை!

 

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ‘இந்த மாவட்டங்களில்’ கனமழை!

தென்மேற்கு பருவக் காற்றின் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், எஞ்சிய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய திருப்பூர், திண்டுக்கல், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்ய கூடும். சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் மிதமான மழையும் பெய்ய கூடும்.

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ‘இந்த மாவட்டங்களில்’ கனமழை!

நாளை நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும், மற்ற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற 18ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் ,திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல் 19, 20ம் தேதிகளில் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஒரு இடங்களில் வெப்பச் சலனத்தின் காரணமாக லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ‘இந்த மாவட்டங்களில்’ கனமழை!

இதனால் இன்று முதல் வருகின்ற 19ஆம் தேதி வரை கேரளா, கர்நாடகா, கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத் தீவு பகுதிகளில் , தென்மேற்கு மத்திய மேற்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்குப் பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.