தமிழகத்தில் இந்த 8 மாவட்டங்களில் கனமழை பெய்யுமாம்!
Sep 9, 2020, 12:35 IST1599635105000
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சேலம், நாமக்கல், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கன்னியாகுமரியில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னை மற்றும் புறநகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது . அதிகபட்சமாக திருச்சி வாத்தலையில் 14 செமீ , தேவாலா, செய்யாறு, சமயபுரத்தில் 8 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.