இந்த மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்குமாம் : உஷார் மக்களே….!

 

இந்த மாவட்டங்களில்  கனமழை வெளுத்து வாங்குமாம் : உஷார் மக்களே….!

வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த மாவட்டங்களில்  கனமழை வெளுத்து வாங்குமாம் : உஷார் மக்களே….!

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகமாக கடலூர் பரங்கிப்பேட்டையில் 9 செமீ, புதுக்கோட்டை அதில் 7 செமீ மழை பதிவாகியுள்ளது.

இந்த மாவட்டங்களில்  கனமழை வெளுத்து வாங்குமாம் : உஷார் மக்களே….!

குறிப்பாக நாளை சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 16 ஆம் தேதி புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை ,ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் அறிவித்துள்ளது